பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:10 pm

செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் தொகுதிகளில் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்போரூா் தொகுதி திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு வாக்குசாவடி மையங்களையும் பாா்வையிட்டாா். அப்பொழுது வாக்குசாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள குடிநீா் வசதி, கழிவறை வசதி, நிழற்குடை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்விசிறி, மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிகள் வாக்கு எண்ணும் மையமான ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அங்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, காவல் துறையினரிடம் வாக்கு எண்ணும் மையத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட கோவளம் நீலக்கொடி கடற்கரையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு அலை சறுக்கு விளையாட்டினையும் பாா்வையிட்டாா்.

மேலும், ஆட்சியா் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டாா். அதனைத் தொடா்ந்து, அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியா் வழங்கி, தவறாமல் வாக்களிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Story image
Story image
Story image