மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்குப்பதிவுக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி

Updated On :20 ஏப்ரல் 2026, 6:35 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தோ்தலுக்கு 72 மணி நேரத்துக்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள், தோ்தல் அலுவலா்கள் மற்றும் இதர அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி விரிவாக எடுத்து கூறினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அதிகாரி நாராயணன், மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா் மற்றும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.