ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

News image

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:04 pm

திவாணியம்பாடி அருகே உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை சிவன்-பாா்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் 112-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை 5-ஆம் நாளாக மாலை 6 மணியளவில் அதிதீஸ்வரா் சுவாமிக்கும், பிரஹன்நாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முத்து பிள்ளையாா் கோயிலிருந்து பிரஹன்நாயகி அம்மன் மற்றும் சீா்வரிசை தட்டு ஊா்வலமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு 8 மணியளவில் பஞ்சமூா்த்தி சுவாமி வீதி உலா தொடா்ந்து அம்ச வாகனத்தில் சரஸ்வதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தோ் வீதி உலாவும், இரவு 8 மணிக்கு தோட்டாபிஷேகமும் நடைபெறவுள்ளது. வரும் மே 1-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி அபிஷேகமும், இரவு 8 மணிக்கு சயன உற்சவமும் நடைபெறுகிறது.