தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற திரௌபதியம்மன்- அா்ஜூனன் திருக்கல்யாணம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:47 pm

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் பூக்குழி விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்தல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திரௌபதியம்மன்- அா்ஜூனன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன்பிறகு, திருக்கல்யாணக் கோலத்தில் திரௌபதி- அா்ஜூனன் எழுந்தருளினா். சிறப்பு யாக பூஜைகளுக்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், பக்தா்கள் சீா்வரிசை வழங்கினா்.

தொடா்ந்து, திருவிழாவில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், பீமன் வேடம், அா்ஜூனன் தபசு, பாசுபதாஸ்திரம் பெறுதல், அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளல், பால் குடம் எடுத்தல் ஆகியவை நடைபெறுகின்றன. முக்கிய விழாவான பூக்குழித் திருவிழா வருகிற 29- ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து கொடி இறக்குதல், மஞ்சள் நீராடுதல், பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடைகிறது.

திருக்கல்யாண விழாவில் சோழவந்தான், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.