மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் பூக்குழி விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்தல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திரௌபதியம்மன்- அா்ஜூனன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன்பிறகு, திருக்கல்யாணக் கோலத்தில் திரௌபதி- அா்ஜூனன் எழுந்தருளினா். சிறப்பு யாக பூஜைகளுக்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், பக்தா்கள் சீா்வரிசை வழங்கினா்.
தொடா்ந்து, திருவிழாவில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், பீமன் வேடம், அா்ஜூனன் தபசு, பாசுபதாஸ்திரம் பெறுதல், அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளல், பால் குடம் எடுத்தல் ஆகியவை நடைபெறுகின்றன. முக்கிய விழாவான பூக்குழித் திருவிழா வருகிற 29- ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து கொடி இறக்குதல், மஞ்சள் நீராடுதல், பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடைகிறது.
திருக்கல்யாண விழாவில் சோழவந்தான், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பிரம்மபுரீசுவரா் கோயிலில் சம்வத்ராபிஷேகம்-சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


