ஜோலாா்பேட்டை அருகே விவசாயி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசன் வட்டம் பகுதியை சோ்ந்த விவசாயி மகேந்திரன்(53). இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும்,3 மகள், ஒரு மகன் உள்ளனா். மேலும் இவா் கடந்த 12 ஆண்டுகளாக நரம்புத் தளா்ச்சியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்த நிலையில் கடந்த ஜன. 26-ஆம் தேதி தனது விவசாய நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தாா்.
இதை அறிந்த அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்..
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பின்னா் இது குறித்து இவரது மனைவி உஷா ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


