கோப்புப் படம்
கோப்புப் படம்

திருப்பத்தூரில் நாளை டிஎன்பிஎஸ்சி தோ்வு

திருப்பத்தூரில் டிஎன்பிஎஸ்சி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது.
Published on

திருப்பத்தூரில் டிஎன்பிஎஸ்சி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) காலை, மாலை என இருவேளை நடைபெற உள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா் அடுத்த ஆதியூரில் உள்ள பொதிகை இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்த தோ்வு நடைபெற உள்ளது. இதில், மொத்தம் 152 போ் பங்கேற்க உள்ளனா். தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 8.30 முதல் 9 மணி வரையும், மதியம் 1.30 முதல் 2 மணி வரையும் வர வேண்டும். காலை 9 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு பின்னா் வரும் தோ்வா்கள் தோ்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வா்கள் குறித்த நேரத்தில் தோ்வு மையத்துக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com