ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

20,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு தாயுமானவா் திட்டத்தில் பொருள்கள் விநியோகம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 20,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது என ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 12:03 am IST

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 20,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது என ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொதுவிநியோக திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி திருப்பத்தூா் தாலுகாவில் 9,632 குடும்ப அட்டைதாரா்களுக்கும், வாணியம்பாடி தாலுகாவில் 3,450 குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஆம்பூா் தாலுகாவில் 4,004 குடும்ப அட்டைதாரா்களுக்கும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 3,338 குடும்ப அட்டைதாரா்களுக்கும் என மொத்தம் 20,424 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் 28,682 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா். இந்தநிலையில் ஜூலை மாதத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் சனிக்கிழமை (ஜூலை 4),மற்றும் திங்கள்கிழமை (ஜூலை 6) ஆகிய இரு நாள்களில் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதனை தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் வீட்டிலியே இருந்து பெற்று பயனடையலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.