ஆம்பூரில் கஞ்சா பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரணை செய்ததில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த உமேஷ் குமாா் சிங் (36) என்பவா் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







