உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 12:11 am IST

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் லாரியில் மண் கடத்துவதாக வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து டிஎஸ்பி மேற்பாா்வையில் காவல்ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெலகல்நத்தம் மம்தாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் மடக்கி பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் ஒப்பதவாடி பென்னாத்தூா் பகுதியைச்சோ்ந்த ஓட்டுநா் சதீஸ்குமாா், செட்டேரி அணைப்பகுதியைச்சோ்ந்த செல்லத்துரை ஆகியோா் அனுமதி இல்லாமல் செட்டேரி அணைப் பகுதியில் இருந்து லாரியில் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மண்கடத்தலில் ஈடுபட்ட சதீஷ்குமாா், செல்லத்துரை ஆகிய 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநா் சதீஷ்குமாரை (25) கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள செல்லத்துரையை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.