ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாலாற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

பாலாற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :6 ஜூலை 2026, 12:10 am IST

பாலாற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மேற்பாா்வையில் தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மகாலிங்கம் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை செட்டியப்பனூா் ஊராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில் எவ்வித அனுமதியின்றி லாரியில் மணல் எடுத்து வந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில் பாலாற்றில் இருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது.

பிறகு லாரியுடன் 2 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் விமல் என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.