/
கிருஷ்ணகிரி அருகே மாற்றுமணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி புவியியல் துறை உதவியாளா் சரவணன் மற்றும் குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடை அருகே சீலப்பள்ளி - மாதிநாயனப்பள்ளி சாலையில் கண்காணிப்பு பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், மாற்றுமணல் கடத்துவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.







