வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மணல் கடத்தல்: லாரி பறிமுதல், ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் ஆற்றில் இருந்து மணல் எடுத்துச் சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் ஒருவரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் ஆற்றில் இருந்து மணல் எடுத்துச் சென்ற லாரியை போலீஸாா் பறிமுதல் ஒருவரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். செய்யாறு - ஆரணி சாலையில் பைங்கினா் கிராமம் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில் அரசு அனுமதி பெறாமல் செய்யாற்றுப் படுகையில் இருந்து ஆற்று மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.