அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

லாரிகள் - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:35 am IST

ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அந்த லாரிகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரிகளுடன் 15 யூனிட் மணலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தருமபுரி மாவட்டம் குருபரஅல்லி பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (44), சேலம் மாவட்டம் நாரப்பன் சாவடி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (40) உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், ஆந்திராவில் இருந்து மணலை வேலூா் வழியாக செங்கல்பட்டுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.