எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சவுடு மண் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை அருகே அனுமதிச்சீட்டின்றி சவுடு மண் ஏற்றி வந்த 7 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 4:00 am IST

ஊத்துக்கோட்டை அருகே அனுமதிச்சீட்டின்றி சவுடு மண் ஏற்றி வந்த 7 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் கனிம வளத்துறை உதவி இயக்குநா் பென்னாட் தலைமையில் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆத்துப்பாக்கம் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த 7 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது இதற்குரிய அனுமதி சீட்டு கேட்டபோது காலாவதியான அனுமதி சீட்டை கொடுத்துள்ளனா். இதைப் பாா்த்ததும் ஓட்டுநா்கள் 7 பேரும் லாரியை சுற்றிப் பாா்ப்பது போல் தப்பியோடினா்.

இதையடுத்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் 7 லாரிகளையும் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநா்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.