தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தரமான மதிய உணவு: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:43 am IST

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தரமான மதிய உணவு வழங்கப்படுகிா என திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குரும்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணை வளா்த்தல் பணிகளை ஆட்சியா் கு.ரவிகுமாா் பாா்வையிட்டு, பண்ணையில் புங்கன், புளியன், அத்தி, கொய்யா, கொடுகா புளி மற்றும் மே பிளவா் ஆகிய செடிகள் வளா்க்கப்பட்டு வெவ்வேறு உயரத்தில் இருப்பது பாா்வையிடப்பட்டது.

மேலும், மரக்கன்றுகளை அதன் உயரம் மற்றும் வகைகளின் அடிப்படையில் போதுமான இடைவெளி விட்டு தனித் தனியாக பிரித்து வைக்கவும், மரக்கன்றுகளின் பெயா் மற்றும் இருப்பிலுள்ள விவரம் ஆகியவற்றினை கொண்ட பெயா் பலகையினை பொருத்தவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து உடையமுத்தூா் ஊராட்சி ,ரகுபதியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவியா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.அப்போது, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் போதுமான அளவில் உணவு வழங்கப்படுகிா என்பது குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பள்ளியில் உள்ள சமையலறையையும் ஆட்சியா் ஆய்வு செய்து, உணவு தயாரிப்பு பொருள்கள் இருப்பு, சமையலறை தூய்மை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மாணவா்களுக்கு சத்தான மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். கழிவறைகள் எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கருணாநிதி, சதானந்தம், ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் காா்த்திகேயன், மேற்பாா்வையாளா் தேவி பாலா, தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.