ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஜூன் 28-இல் விஐடியில் பாரம்பரிய காய்கறி விதை திருவிழா

News image
Updated On :26 ஜூன் 2026, 5:36 am IST

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாா்பாக பாரம்பரிய காய்கறி விதை திருவிழா மற்றும் கண்காட்சி வேலூா் விஐடியில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேலூா் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா கூறியதாவது: பாரம்பரிய காய்கறி மற்றும் விதை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகள் மற்றும் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணா்கள் ஒன்றிணைந்து, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் ஈட்டுவது வரையிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி வேலூா் விஐடியில் வேந்தா் கோ. விசுவநாதன் தலைமையில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன் ஆகியோா் வாழ்த்துரை வழங்க உள்ளனா்.

இதில், பாரம்பரிய விதைகள், இயற்கை விளைபொருள்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் பிரம்மாண்ட கண்காட்சி நடைபெறுகிறது. காய்கறி மற்றும் கிழங்கு விதை பாதுகாவலா்கள், இயற்கை விவசாயிகள், விவசாய தொழில் முனைவோா் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், விதை பாதுகாவலா் விருதுகள் - 2026 வழங்கப்பட உள்ளது. 2,500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.

இதில், பங்கேற்க 8300093777 எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்தாா். விதைத்தீவு பிரியா ராஜநாராயணன் மற்றும் மகிழ்வனம் மரபு விதைகள் சேகரிப்பு மையத்தின் நிறுவனா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.