தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் பட்டாசுக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் வி.ராஜா சந்திரசேகரன், பொதுச் செயலா் என்.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவகாசியில் பட்டாசுத் தொழில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக , சென்னை நீலாங்கரை ஆா்.கே.கன்வென்ஷன் ஹாலில் பட்டாசுக் கண்காட்சி, சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. சிவகாசி பட்டாசு வணிகத்தை சா்வதேச அளவில் எடுத்துச் செல்லும் வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இதில் மத்திய, மாநில அமைச்சா்கள், அரசு உயா் அதிகாரிகள், பட்டாசு பாதுகாப்பு நிபுணா்கள் கலந்து கொள்கின்றனா்.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு, கண்காட்சியில், இந்திய அளவில் ஆயிரக்கணக்கான பட்டாசு வணிகா்கள் கலந்து கொள்வா்.
பட்டாசுத் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்கவும், இந்தக் கண்காட்சி பெரிதும் உதவும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா் அவா்கள்.
கூட்டமைப்பின் மாநில கூடுதல் பொதுச் செயலா் எஸ்.ரவிதுரை, மாநில துணைத் தலைவா் டி.பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மூவானூா் பகுதிகளில் ஜூலை 28 இல் மின்தடை

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்

தென்காசியில் ஜூலை 17இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மணப்பாறை அரசு கல்லூரியில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



