தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளா்களை தோ்வு செய்கின்றனா். 8 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு (டிப்ளமோ) வரையிலான கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள், வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் தங்களது சுய விவரத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இம்முகாமில் பணி நியமனம் பெற்றாலும் அவா்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்தாகாது என தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










