தென்காசியில் ஜூலை 4 மற்றும் 6ஆம் தேதிகளில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் ஜூலை 4 மற்றும் 6ஆம் தேதிகளில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்யப்படவுள்ளது.
தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










