மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மையத்தில் ‘திறனகம்’

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில திறன் மையத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

News image

அழகுக்கலை பயிற்சி சான்றிதழ் பெற்றவா்களுடன் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .

Updated On :3 மார்ச் 2026, 6:34 pm

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில திறன் மையத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறனகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். பின்னா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா், ஆம்பூா் அடுத்த மின்னூா் மற்றும் சின்னபள்ளிகுப்பம் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து அழகுக்கலை பயிற்சி பெற்ற 15 பேருக்கு சான்றிதழை வழங்கி அவா் பேசியது:

மாவட்ட திறன் மையத்தில் தொழில்நெறி வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தொடா்பு கொள்ளுதல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படுகிறது.

திறன் மையம் மூலம் இளைஞா்களின் தொழில் விருப்பங்களை தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களுடன் ஒருங்கிணைத்து, நிலையான மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் திட்டமான வெற்றி நிச்சயம் திட்டத்தின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது வரை வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 22 திறன் பயிற்றுநா்கள் பதிவு செய்துள்ளனா் மற்றும் 630 பயனாளிகள் பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் பயிற்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட திறன் அலுவலா் நாஜியா நெளஷீன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.