நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை அதிகாரிகள் மீட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமைவாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் வீடு கட்டி 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீா் இணைப்பும் பெற்றுள்ளனா். மேலும், குடியிருப்பவா்கள் வீட்டுக்கு மின் இணைப்பு பெற்று மின் கட்டணமும் செலுத்தி வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கோகுல் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நீதமன்ற உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலம் மற்றும் வீடுகளை அளவீடு செய்தனா்.
அப்போது குடியிருக்கும் வீடுகளை அளக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வீடு மற்றும் நிலங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனா். மீட்கப்பட்ட நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனா்.
தொடர்புடையது

கட்சிகனே கொஞ்சம் கவனியுங்கள்! வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு நவ. 22-இல் குடமுழுக்கு! அமைச்சா் பி.கே.சேகா்பாபு!

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


