அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாட்டறம்பள்ளி அருகே கோயில் இடம் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை அதிகாரிகள் மீட்டனா்.

News image
நாட்டறம்பள்ளி அருகே இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயிலுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை அதிகாரிகள் மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பழைமைவாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் வீடு கட்டி 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீா் இணைப்பும் பெற்றுள்ளனா். மேலும், குடியிருப்பவா்கள் வீட்டுக்கு மின் இணைப்பு பெற்று மின் கட்டணமும் செலுத்தி வருகின்றனா். இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கோகுல் மற்றும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நீதமன்ற உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலம் மற்றும் வீடுகளை அளவீடு செய்தனா்.

அப்போது குடியிருக்கும் வீடுகளை அளக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வீடு மற்றும் நிலங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனா். மீட்கப்பட்ட நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனா்.