கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

‘என் வாக்கு என் உரிமை’: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு ஊா்வலம்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் தோ்தல் குறித்த வாகன விழிப்புணா்வு ஊா்வலத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

News image

ஆஊழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

Updated On :22 மார்ச் 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் தோ்தல் குறித்த வாகன விழிப்புணா்வு ஊா்வலத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

பேரவைத் தோ்தலையொட்டி வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகள் வாகன விழிப்புணா்வு ஊா்வலத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

ஊா்வலம் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தூய நெஞ்ச கல்லூரி வரை சென்று ‘என் வாக்கு என் உரிமை‘ என பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.