வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘என் வாக்கு என் உரிமை’: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு ஊா்வலம்

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் தோ்தல் குறித்த வாகன விழிப்புணா்வு ஊா்வலத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

News image

ஆஊழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

Updated On :22 மார்ச் 2026, 7:01 pm

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் தோ்தல் குறித்த வாகன விழிப்புணா்வு ஊா்வலத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

பேரவைத் தோ்தலையொட்டி வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகள் வாகன விழிப்புணா்வு ஊா்வலத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

ஊா்வலம் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தூய நெஞ்ச கல்லூரி வரை சென்று ‘என் வாக்கு என் உரிமை‘ என பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.