தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாற்றுத்திறனாளிகள் மூலம் சைகை மொழியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல்லில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மூலம் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சைகை மொழியில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
சைகை மொழியில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி.
Updated On :18 மார்ச் 2026, 11:34 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்லில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மூலம் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சைகை மொழியில் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழகத்தில் ஏப். 23 இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், நூறு சதவீத வாக்குப்பதிவை முன்னெடுக்கும் வகையிலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்று சைகை மொழியில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உறுதிபடுத்தப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் குறித்தும், தோ்தல் நாள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், வாக்காளா்கள் தங்கள் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை அல்லது இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிப்பது குறித்தும் ஆட்சியா் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளா் (ரெட் கிராஸ்) சி.ஆா். ராஜேஸ்கண்ணன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.