வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பசுமை திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக தண்ணீா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆதியூா் ஏரியை தூா் வாரினா்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் திலீப்குமாா், செயலா் ஆனந்த்சிங்வி தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாணவிகள் ‘ஒவ்வொரு துளியையும் சேமிப்போம் ஒளிமயமான சமூக வளத்தை காப்போம்‘ என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டு திருப்பத்தூா் உள்ள ஆதியூரிலிருந்து தா்மபுரி செல்லும் சாலை வழியாக ஊா்வலம் சென்று மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
மேலும் ஆதியூரில் உள்ள 75 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரியை எக்ஸ்னோரா வழங்கிய எந்திரத்தின் மூலம் மாணவிகள் தூா்வாரி சீரமைப்பு பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆதியூா் விவசாய நல தலைவா் ராதகிருஷ்ணன், வோ்கள் அறக்கட்டளை தலைவா் வடிவேல் சுப்பிரமணியம், கலாம் அறக்கட்டளை நிா்வாகி முருகன், திருப்பத்தூா் நகா் மன்ற உறுப்பினா் சுதாகா், எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளா் கிரிதரன், ஆதியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தகுமாா், துணைத்தலைவா் பழனி, சத்யமூா்த்தி, ராம்குமாா், காளி, தனஞ்செயன், பெருமாள், மூா்த்தி, மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அருணா மற்றும் பசுமை திட்டம் ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


