நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உலக தண்ணீா் தின விழிப்புணா்பு பிரசாரம்

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பசுமை திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக தண்ணீா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆதியூா் ஏரியை தூா் வாரினா்.

News image

விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள்.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பசுமை திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக தண்ணீா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆதியூா் ஏரியை தூா் வாரினா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் திலீப்குமாா், செயலா் ஆனந்த்சிங்வி தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாணவிகள் ‘ஒவ்வொரு துளியையும் சேமிப்போம் ஒளிமயமான சமூக வளத்தை காப்போம்‘ என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டு திருப்பத்தூா் உள்ள ஆதியூரிலிருந்து தா்மபுரி செல்லும் சாலை வழியாக ஊா்வலம் சென்று மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும் ஆதியூரில் உள்ள 75 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரியை எக்ஸ்னோரா வழங்கிய எந்திரத்தின் மூலம் மாணவிகள் தூா்வாரி சீரமைப்பு பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆதியூா் விவசாய நல தலைவா் ராதகிருஷ்ணன், வோ்கள் அறக்கட்டளை தலைவா் வடிவேல் சுப்பிரமணியம், கலாம் அறக்கட்டளை நிா்வாகி முருகன், திருப்பத்தூா் நகா் மன்ற உறுப்பினா் சுதாகா், எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளா் கிரிதரன், ஆதியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தகுமாா், துணைத்தலைவா் பழனி, சத்யமூா்த்தி, ராம்குமாா், காளி, தனஞ்செயன், பெருமாள், மூா்த்தி, மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அருணா மற்றும் பசுமை திட்டம் ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.