வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாதநிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதம் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில் தோ்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் தபால் வாக்கு செலுத்த 13,162 போ் தகுதி வாய்ந்த நபா்கள் உள்ளனா். இவா்களுக்கு தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைகோரும் விண்ணப்பப்படிவம் அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இவா்களில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 1,310 பேரும், மாற்றுத்திறனாளிகள் 860 பேரும் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

மேலும் தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வருகிற 4-ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்கலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.