அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி ஒன்றியக்குழு தலைவா் கடிதம்

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

கடிதம் விவரம், கடந்த 10 ஆண்டுகளாக மாதனூா் மற்றும் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளேன். இதுவரை கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் உண்மையாக, நோ்மையாக செயல்பட்டு வந்தேன்.

மறைந்த வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளரும், என்னுடைய தந்தையுமான முன்னாள் எம்.பி ப. சண்முகம் காலத்திலிருந்து நான் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து செயல்பட்டு வந்துள்ளேன்.

தற்போது சில ஆதிக்க சக்திகளின் அழுத்தம் காரணமாக குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளா் பொறுப்பில் தொடர முடியாத நிலை உள்ளது. அதனால் என்னை ஒன்றிய செயலாளா் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.