ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி ஒன்றியக்குழு தலைவா் கடிதம்

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

கடிதம் விவரம், கடந்த 10 ஆண்டுகளாக மாதனூா் மற்றும் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளேன். இதுவரை கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் உண்மையாக, நோ்மையாக செயல்பட்டு வந்தேன்.

மறைந்த வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளரும், என்னுடைய தந்தையுமான முன்னாள் எம்.பி ப. சண்முகம் காலத்திலிருந்து நான் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து செயல்பட்டு வந்துள்ளேன்.

தற்போது சில ஆதிக்க சக்திகளின் அழுத்தம் காரணமாக குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளா் பொறுப்பில் தொடர முடியாத நிலை உள்ளது. அதனால் என்னை ஒன்றிய செயலாளா் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.