ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி ஒன்றியக்குழு தலைவா் கடிதம்

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

கடிதம் விவரம், கடந்த 10 ஆண்டுகளாக மாதனூா் மற்றும் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளேன். இதுவரை கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் உண்மையாக, நோ்மையாக செயல்பட்டு வந்தேன்.

மறைந்த வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளரும், என்னுடைய தந்தையுமான முன்னாள் எம்.பி ப. சண்முகம் காலத்திலிருந்து நான் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து செயல்பட்டு வந்துள்ளேன்.

தற்போது சில ஆதிக்க சக்திகளின் அழுத்தம் காரணமாக குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளா் பொறுப்பில் தொடர முடியாத நிலை உள்ளது. அதனால் என்னை ஒன்றிய செயலாளா் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.