கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றியக்குழு தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றியக்குழு தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாா்க்கத்தில் மாதனூா் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பயணிகள் காத்திருப்பு நிழல்கூரை பகுதியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

பயணிகளுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து பேருந்து நிறுத்த நிழல்கூரை பகுதியில் தினமும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறினாா்.

ஊராட்சித் தலைவா் குமாா், பணி மேற்பாா்வையாளா் சுரேன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.