திருப்பத்தூா் அருகே காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
கந்திலி அடுத்த கசிநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சாமிநாதன் (75). இவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினா் கந்திலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், திருப்பத்தூா் அடுத்த பாராண்டபள்ளியில் கோவிந்தசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சாமிநாதன் உடல் கிடப்பதாக கந்திலி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


