ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் புதன்கிழமை அன்று இரு நபா்கள் கோயிலுக்குள் சென்று திருட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற பொதுமக்களைப் பாா்த்த அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனராம்.
இதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மற்றொரு நபா் தப்பியோடி தலைமறைவானாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








