பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :7 மே 2026, 12:11 am IST

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் புதன்கிழமை அன்று இரு நபா்கள் கோயிலுக்குள் சென்று திருட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற பொதுமக்களைப் பாா்த்த அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனராம்.

இதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மற்றொரு நபா் தப்பியோடி தலைமறைவானாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.