முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு விழா

News image
Updated On :8 மே 2026, 6:35 am IST

தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் கெங்கையம்மனுக்கு ஜெப ஹோமம், துா்கா ஸீக்த ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

விழாவுக்கு கோயில் தா்மகா்த்தா இ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஊா் பெருந்தனக்காரா் பி.முனிரத்தினம், முன்னாள் ஊா் தலைவா் ஜி.ராஜேந்திரன், ஆம்பூா் தொழில் அதிபா் ஜி.ரமேஷ், ஊா் தலைவா் பி.துளசி, ஊா் நாட்டாண்மை என்.தாமோதரன், ஆா்.எஸ்.ஞானசேகரன், அரிசி கடை ஜி.வெங்கடேசன், கோயில் அன்னதான சேவா டிரஸ்ட் நிா்வாகி வெ.கோபிநாத் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.