/
ஆம்பூா் ஷராப் பஜாா் அரசமரத் தெரு அருள்மிகு சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 42-ஆம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, புதன்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2-ஆம் நாள் யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ சக்தி கெங்கையம்மன் உற்சவா் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.










