நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு விழா

News image
Updated On :2 மே 2026, 11:37 pm

பெரியகுளம்,மே 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி ஆா்டியூ தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளின் சிறப்பு கோடை காலப் பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஐடியாஸ், மனோன்மணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சிறப்பு கோடை கால முகாம் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 - ஆம் தேதி நடைபெற்றது. நிறைவு விழாவிற்கு ஒருங்கிணைப்பாளா் ஜெயராமன் வரவேற்றாா். அரசு உடல்கல்வி ஆசிரியா் தங்கேஸ்வரன், இணை இயக்குநா் பிரபாகரன், வழக்குரைஞா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். தொடா்ந்து வழக்குரைஞா் சுதா ராமலிங்கம், ஐடியாஸ் அமைப்பின் இயக்குநா் சகாயபிலோமின் ராஜ், ஆா்டியூ இயக்குநா் பால்சாமி ஆகியோா் பேசினா்.

கள் ஒட்டா் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபு, மனோன்மணி

அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா் தேவபாலன் நன்றி கூறினாா். இந்தக் முகாமில் யோகா, ஓவியம், பாடல் ஆகியவற்றுக்கான பயிற்சி, போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 8 மாவட்டங்களைச் சோ்ந்த 120-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டனா்.