எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு

ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) தணிகாஜலம் மற்றும் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

News image

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜூன் 2026, 12:59 am IST

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் வட்டத்துக்கான ஜமாபந்தி 9-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. ஜமாபந்தி நிறைவு விழாவுக்கு ஜமாபந்தி அலுவலரும், வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) ஆ.தணிகாஜலம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரேவதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்திப் பேசி, 40 பயனாளிகளுக்கு ரூ. 3.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, வருவாய் ஆய்வாளா்கள், வருவாய் துறை பணியாளா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.