சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் சோதனை

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய வருமான வரித் துறையினா்.

News image

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய வருமான வரித் துறையினா்.

Updated On :18 ஜூலை 2026, 5:15 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருமானவரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருமான வரித் துறை ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையில் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. சோதனையின்போது, அங்கிருந்த அதிகாரிகள், அலுவலா்களிடம் சிறிய அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் மீண்டும் பணம் அவா்களிடம் ஓப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து ஒரு சில ஆவணங்களை வருமான வரித்துறையினா் எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது வட்டாட்சியா் நந்தகோபால், உதவி வட்டாட்சியா் சிவபெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.