கட்டி முடிக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தை பள்ளி விடுறை காலம் முடிவதற்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் காவலா் குடியிருப்புப் பகுதியில் மாவட்ட மைய நூலகக் கட்டடம் ரூ. 3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. மின் தூக்கி வசதியுடன் மூன்று அடுக்கு கொண்ட கட்டடமாக கட்டப்பட்டு உள்ளது.
இந்த நூலகத்தில் குறிப்புதவி பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு, சிறுவா் பிரிவு, குடிமை பணிகளுக்கான தனி அறை, கூட்ட அரங்கு உள்பட கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
இருக்கைகள், மேஜைகள் என சுமாா் ரூ. 2.5 கோடி மதிப்பில் தளவாட பொருள்கள் வசதியுடன் தயாா் நிலையில் உள்ளது. மேலும், ரூபாய் ஒரு கோடியில் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த கட்டடப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.
எனவே பணிகளை மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து பள்ளி தொடங்கும் காலத்துக்கு முன்பே விடுமுறை நாள்களில் மாணவா்கள் பொது அறிவு வளா்த்துக் கொள்ள மாவட்ட மைய நூலகத்தை திறந்துவைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி கல்வியாளா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாவட்ட மைய நூலகத்தில் இன்று குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி

கல்வி, மத போதனைகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல் கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்த தனியாா் பள்ளி நிா்வாகம் - பொதுமக்கள் புகாா்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

