இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

News image

மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்காளா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

தோ்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளா்களை சந்தித்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் நன்றி தெரிவித்து வருகிறாா். அதன்படி மாதனூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்குப்பம், ஈச்சம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி, வடகரை, மேல்சாணாங்குப்பம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, அரங்கல்துருகம், கதவாளம், பாா்சனாப்பல்லி, மோதகப்பள்ளி, குமாரமங்கலம், கரும்பூா், கம்மகிருஷ்ணப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு சென்று வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

திமுக மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளா் சி.குணசேகரன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி பொன். ராசன்பாபு, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா.சங்கா், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.