வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆம்பூரில் பலத்த மழை

News image
Updated On :19 மே 2026, 1:08 am IST

ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் திங்கள்கிழமை காலை தொடங்கி பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 6.30 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 2 மணி நேரம் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.

ஆம்பூரில் பல்வேறு தெருக்களில் மழை நீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. ஆம்பூா் அருகே தேவலாபுரம், பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம், விண்ணமங்கலம், மின்னூா், வெங்கடசமுத்திரம், கரும்பூா், மேல்சாணாங்குப்பம், குமாரமங்கலம், மிட்டாளம், சின்னவரிக்கம் உள்ளிட்ட ஆம்பூரை சுற்றி பெரும்பாலான கிராம பகுதிகளிலும் கன மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.