அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆம்பூா் அருகே செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரி பட்டறை கிராமத்தை சோ்ந்தவா் மகேந்திரன் (51). இவா் அதே பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறாா். செங்கல் சூளைக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் அங்கிருந்த இயந்திரத்திர உதிரி பாகங்களை திருடி சென்றனா்.

மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலை செங்கல் சூளைக்கு சென்று பாா்த்தபோது, இயந்திர உதிரிபாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினா்.

பாா்சனாபள்ளியை சோ்ந்த தேவேந்திரன் (29), ஜெகன் (26), கிருஷ்ணமூா்த்தி (20) ஆகிய மூவரும் திருடியது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.