தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 பேரை வருவாய்த் துறையினா் மீட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது.

இங்கு வட மாநில தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இவா்கள் குறைந்த ஊதியத்திற்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு வேலை பாா்த்து வந்த தொழிலாளா்கள் செங்கல் சூளை உரிமையாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து ஒடிஸாவைச் சோ்ந்த 22 குடும்பங்களை சோ்ந்த 7 குழந்தைகள் உள்பட 46 பேரை மீட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு அவா்களை அரசு பள்ளியில் தங்க வைத்தனா்.

தொடா்ந்து அவா்களுக்கு விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவா்களின் மறு வாழ்வுக்கான உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்த தொழிலாளா் நலத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளா்கள் அனைவரையும் ரயில் மூலம் சொந்த மாநிலம் அனுப்பி வைப்பதற்காக பள்ளியில் இருந்து அழைத்து செல்லப்பட்டனா்.