/
வேலூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
வேலூா் அருகே அரியூா் ஆவாரம்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் ராதா (63). இவா் கடந்த 15-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டில் புகுந்த பாம்பு மூதாட்டியை கடித்துள்ளது. உறவினா்கள் அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அரியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.









