/
வேலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் அருகே உள்ள மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராதா (51). இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது பைக்கில் வேலூா்-ஆரணி சாலையில் சென்றாா். கணியம்பாடி பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.








