

திருவேற்காடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது .
சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட பல இடங்கள் சமீபத்தில் பெய்த தொடர் கன மழையால் வெள்ளக்காடானது.
இந்நிலையில், கோலடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மழைநீர் அகற்றப்படாமல் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நகராட்சி உடனடியாக, நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.