கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காமாட்சி அனல் மின் நிலைய கொதிகலன் குழாய் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பாத்தபாளையம் பகுதியில் காமாட்சி அனல் மின் நிலையம் உள்ளது. இந்த தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை தொழிற்சாலையின் கொதிகலனின் இணைப்புக் குழாயில் சிறிய வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்த சுடுமணல் தெறித்துச் சிதறியது.
அப்போது கொதிகலன் அருகே வேலை பார்த்து வந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியே ஓடினர். இதில், வடமாநில தொழிலாளிகளான பல்ராம் (25), சுபம்(25), டியூவாஷ்(25), சுந்தர்சிங்(21) ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் கவரப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

