திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில், இருதய நோய் கண்டறியும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு இருதய நோய் கண்டறியும் வகையில், தமிழக அரசும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மனநிலை, இருதயத் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக சிகிச்சை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இருதய சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சேகர் தலைமை வகித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பாஸ்கர் ரெட்டி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
இதில் அப்பல்லோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் சத்தியபிரகாஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு, சிகிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், 2 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 9.30 முதல் 11 மணி வரையில் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கும், 11.30 மணி முதல் ஒரு மணி வரையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இருதய நோய் கண்டறியும் முகாம் நடைபெற இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கெளரிசங்கர், அரசு மருத்துவமனையின் தொற்றா நோய் தடுப்புத் திட்ட மருத்துவர் விஜயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

இந்த மலிவான அரசியல் வேண்டாம்: கே.என். நேருவுக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


