குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அம்மா பூங்காவுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணி: அமைச்சர்கள் ஆய்வு

திருவள்ளூர் அருகே அம்மா பூங்காவுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணியை மாநில ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர்

News image

அம்மா பூங்கா பார்வையிட்ட அமைச்சர்கள் பா.பெஞ்சமின், பாண்டியராஜன், ஆட்சியர் எ.சுந்தரவல்லி.

Updated On :19 ஏப்ரல் 2018, 4:15 am IST

திருவள்ளூர் அருகே அம்மா பூங்காவுடன் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணியை மாநில ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் இளைஞர்களின் திறன்களை பயனுள்ளதாக்கவும், உடல் நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தும் வகையிலும் பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் முதல்கட்டமாக 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 49 ஊராட்சிகளில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதில், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சென்னீர்குப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் பெஞ்சமின், க.பாண்டியராஜன், ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 
இதைத் தொடர்ந்து, காட்டுவாக்கத்தில் அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சி மைதானம் அமைக்கும் பணியை ஆய்வு செய்ததோடு, விரைவில் பணிகலை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். 
இந்த ஆய்வின் போது, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.