தனியார் நூற்பாலையில் திருடிய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ உள்பட இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்தணியை அடுத்த சரஸ்வதி நகரில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நூல் உற்பத்தி செய்யும் ஆலை இயங்கி வந்தது. தற்போது, அங்கு அந்நிறுவனத்தின் இரும்பு மற்றும் அலுமினியத் தகடுகள் உள்ளன. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த நாகசாமி (59) காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் யாரோ சிலர் இரும்பு, அலுமினிய தகடுகளை திருடிச் சென்றதை அடுத்து நாகசாமி திருத்தணி குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் போலீஸார் சனிக்கிழமை அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, ஆட்டோ ஒன்றும், இரு சக்கர வாகனம் ஒன்றும் அதிவேகமாகச் சென்றதை அடுத்து, அவற்றை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், அவர்கள் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்த முகேஷ்குமார் (19), பிரவீண்குமார் (25) மற்றும் சமிபுல்லா(18) என்பதும், இவர்கள் மூவரும் தனியார் நூற்பாலையில் கிடந்த இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
ரஜினிகாந்த் 173 படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


