

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சியதாக 6 மின் மோட்டார்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி, திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லிக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவுப்படி, வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ உள்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொசஸ்தலை ஆற்றில் குழாய் இணைப்பு பொருத்தப்பட்டு தண்ணீர் உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட 6 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.