வாகனம் மோதியதில் தொழிலாளர் சாவு

திருத்தணி அருகே சாலையோரம் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.
Published on

திருத்தணி அருகே சாலையோரம் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.
கனகம்மாசத்திரத்தை அடுத்த ஸ்ரீஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா (40). இவர், வியாழக்கிழமை சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ராமஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செஞ்சய்யா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். 
இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com