திருவள்ளூர் அருகே குப்பைகள் அகற்றாததால் துர்நாற்றம்: பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடு அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


திருவள்ளூர் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடு அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த ம.பொ.சி. நகரில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தெருக்களில் இருந்து இப்பகுதி சாலையோரங்களில் காய்கறிகள், உணவுப் பொட்டலங்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை கொட்டிச் செல்கின்றனர்.
தற்போது ஊராட்சிப் பணியாளர்கள் முறையாக அகற்றாமல் அப்படியே விட்டு விடுவதால் குப்பைகள் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன. தற்போது, குப்பைகள் அழுகிய நிலையில் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
அதனால், இவ்வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதனால், ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...